Sunday, January 26, 2014

இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம்.

இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம்.

(Izz ad-Din al-Qassam, military wing of the Hamas)

பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை படிக்கும் சகலரும் அறிந்துவைத்திருக்க வேண்டியவர்கள் இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் அவர்கள்.பிரான்ஸ், பிரித்தானியாவின் காலனித்துவத்திற்கு எதிராகவும் குறிப்பாக 1920ம் ஆண்டுக்குப் பின்னர் சியோனிஸத்திற்கு எதிராகவும் இளைஞர்களை ஒன்று திரட்டிப் போராடினார்கள். சிரியாவில் பிறந்த உயர்கல்விக்காக அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் சென்றார்கள். வஹாபிஸ சிந்தனையாளர்களான முஹம்மத் அப்துஹ், ராஷித் ரிழா போன்றவர்களிடமும் இமாம் கஸ்ஸாம் கற்றார்கள். வஹாபிகளிடம் கற்றாலும் காதிரியா தரீக்காவையே அவர்கள் பின்பற்றினார்கள். சமூக சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்டிருந்தமையால் கூடுதலானோர் இவர்களின் கருத்துக்களால் கவரப்பட்டார்கள். இஸ்ஸதீன் கஸ்ஸாம் சமூக சீர்த்திருத்த பணிகளுக்கு அவர் பின்பற்றிய காதிரிய்யா தரீக்கா உந்துசக்தியாக அமைந்தது.
பெனிட்டோ மொஸோலினியின் இத்தாலியப் படை 1911ல் லிபியாவை ஆக்கிரமித்த போது அதற்கு எதிராக போராட அவர்கள் தயாரானார்கள். லிபியவைப் பாதுகாக்க நிதி
திரட்டினார்கள்.போராட்டத்திற்கான வெற்றிபாடலும் இமாம் அவர்களாலேயே இயற்றப்பட்டது. 1912ம் ஆண்டு வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர் இத்தாலியரை எதிர்ததுப் போராடுமாறு
லிபியர்களுக்கு பகிரங்கமாக அழைப்புவிடுத்தார்கள். 1919ம் ஆண்டு பிரான்ஸியரின் ஆக்கரமிப்புக்கு எதிராக சிரியாவில் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். பிரான்ஸின் ஆதரவுடன்
இயங்கிய அலவியர்களுக்கு எதிராக இமாம் கஸ்ஸாமின் ஜப்லிஹ் படைதாக்குதலை நடத்தியது. இதன்போது தான் பிரான்ஸியர்களுக்கு எதிராக இமாமின் படை கெரில்லா தாக்குதல் நடத்தியது.
1929ம் ஆண்டு பலஸ்தீன் ஷரீஆ நீதிமன்றத்தின் திருமணப்பதிவாளராக நியமிக்கப்பட்டார்கள். பலஸ்தீனில் விவிசாய அமைப்புக்களை கட்டியெழுப்புவதிலும் அயராது உழைத்தார். இஸ்ரேல் -பிரிடிஷ் எதிர்ப்பு இயக்கமானThe Black Hand group இமாம் அவர்கள் 1930ம் ஆண்டில் உருவாக்கி ஸியோனிஸர்களுக்கு எதிரான தாக்குதல்களை ேற்கொண்டார்ள். பலஸ்தீன் மக்களுக்கு சொந்தமான காணிகளில் நிறுவப்பட்டிருந்த சட்டவிரோதக்குடியிருப்புக்கள் மீது இந்த படைதாக்குதல் நடத்தியது. ஜெரூஸலத்தின் முப்தி ஹாஜ் முஹம்மத் அமீன் அவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணினார்கள். ஜேர்தானைச் சேர்ந்த காலனித்துவ எதிர்பாளரான மன்னர்ரஷீத் அல் குசையின் நெருக்கிய ஆதரவும் இமாம் அவர்களுக்கு இருந்தது. இமாம் கஸ்ஸாம் அவர்கள் 1935
நவம்பர் மாதம் 20ம் திகதி 52ம் திகதி பிரிடிஷ் பொலிஸாரின் தாக்குதலில்
ஷஹீதாக்கப்பட்டார்கள். இமாம் அவர்கள் ஷஹீதாக்கப்படதன் பின்னர் டேவிட் பென்கூரியன் என்ற யூதன் இப்படிச் சொன்னான். 'முதல் தடவையாக ஒருவர் தனது வாழ்வை அர்ப்பணித்ததை அரபிகள் கண்டுவிட்டார்கள்.அரேபியர்களிடம் குறைபாடாக இருந்த தர்மீக உறுதியை இது வழங்கும்" என்றான். யூத சியோனிஸத்திற்கு எதிரான போராட்டத்தில் இமாம் அவர்கள் ஓர் அழியாச்சின்னமாகும். இமாம் அவர்களை கௌரவிக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பின் இராணுவப்பிரிவுக்கு 'இஸ்ஸத்தீன் அல்கஸ்ஸாம் படையணி" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஸ்ஸாம் ஏவுகணையும் பலஸ்தீன் போராளிகளால் பயன்படத்தப்படுகிறது. கதிரியா தரீக்காவே இஸ்ஸத்தீன் அல்கஸ்ஸாமை உருவாக்கி பதப்படுத்திய பாசறை என்பதை எவராலும் நிராகரிக்க முடியாது.
 
Information by Fazhan Nawas

0 comments:

Post a Comment

 
;