Sunday, January 26, 2014

அப்துல் காதிர் ஜீலானி - ஸலாஹ்தீன் அய்யூபி

அப்துல் காதிர் ஜீலானி - ஸலாஹ்தீன் அய்யூபி


“இவரை போன்று ஒர் ஆட்சியாளர் வர வேண்டுமே” என்று ஆதங்கப்படுபவர்கள் முஸ்லிம்களை விட கிறிஸ்தவர்கள். சுல்தான் ஸலாத்தீன் அய்யூபி அவர்கள் உலக வராலற்றில் ஒரு சிறந்த போர் வீரர் என்பதற்கு மேலதிகமாக பல்லின சமூகத்தால் போற்றப்பட்ட அதிமேதகு ஆட்சியாளர். முதல் கிப்லா பைதுல்மக்திஸில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசலை கி.பி 1187ம் ஆண்டு முஸ்லிம் உம்மாவுக்கு மீட்டுத்தந்தார். குத்தஸை மீட்ட போது பணம் நட்ட ஈடு செலுத்த வசதியற்றவர்களுக்கு சொந்த பணத்தில் இருந்து வாரிக்கொடுத்தார். மரணப்படுக்கையிலிருந்து திறைசேரியை உற்று நோக்கினார். ஜெரூஸம் விடுவிக்கப்பட்டது.கிறிஸ்தவர்கள் அஞ்சிக்கொண்டிருந்தார்கள் ஸலாஹ_த்தீன் உயரை எடுத்துவிடுவார் என்று. அங்கிருந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை விட அதிகம். “நீங்கள் திருப்தியடையும் எந்த இடத்திற்கும் செல்லலாம் நீங்கள் சுதந்திரமளிக்கப்பட்டுவிட்டடீர்கள்” என்ற வசனம் வரலாற்றில் ஓர் ஏடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அஹ்லுஸ் சுன்னாவுக்கு முராணான அகீதா போதிக்கபடுவதை அறிந்த அவர் பல்கலைகழகத்தை தற்காலிகமாக மூடினார். சுல்தான் ஸலாத்தீன் அய்யூபி அவர்கள் “காதிரியா தரீக்காவைச் சேர்ந்தவர். சூபிஸத்தின் பயிற்சிகளே அவரை ஒரு சிறந்த ஆட்சியாளராக மாற்றியது. சுல்தான் ஸலாஹ_த்தீன் படையில் இருந்த தளபதிகளும், படைவீரர்களும் காதீரியா தரீக்காவைச் சேர்ந்தவர்கள் என்று பேராசிரியர் தாஹிருல் காதிரி அவர்களும் கூறுகிறார். செய்ஹ் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் ஒரு மாணவரை இன்றை உலகம் ஆட்சிக்காகத் தேடிக்கொண்டிருக்கிறது. சுல்தான் ஸலாஹ_த்தீன் அய்யூபி ஒரு காதிரி என்பதை நாம் எத்தனை பேர் தான் அறிந்து வைத்துள்ளோம்

0 comments:

Post a Comment

 
;