இஸ்லாத்திக்கு எதிராக செயற்படும் பிரிடிஷ்காரார்கள்?
இஸ்லாத்தின் எதிரிகள் ரஸூல்(ஸல்) அவர்களின் காலம்முதல் இன்றுவரை இஸ்லாத்தை அழிக்க முயன்றுவருகிறார்கள். தற்காலத்தில் கம்பியூ னிஸவாதிகள், கிறிஸ்தவர்கள்,யூதர்கள் போன்ற பலர் பல்வேறு திட்டங்களுடன் இஸ்லாத்திக்கு எதிராக செயற்படுகிறார்கள்.தந்திரவிளையாட்டுக்களில் ஈடுபட்டு,நேர்வழியைப் பின்பற்றும் அஹ்லுஸ்ஸூன்னாக்களின் மீது அவதூறுகள் கட்டவிழ்க்கும் முஸ்லிம்கள் என்ற போர்வையில் வாழும் நயவஞ்சகர்கள்,மேற்குறிப்பிட்ட இஸ்லாத்தின் எதிரிகளோடு ஒன்றாக செயற்படுபவர்களே!,இவர்கள் அஹ்லுஸூன்னாவை அழிப்பவர்கள் ஆகும்.
இவ்வாறு தூய இஸ்லாத்தை பிரிவடையச்செய்ய முன்னோடியாகாக இருந்தவர்கள் பிரிடீஷ்காரர்களே!, இப்பிரிடிஷ்காரர்கள், இஸ்லாத்தில் பிளவுகளை ஏற்படுத்தி இஸ்லாத்தை அழிப்பதற்காக அவர்களின் வளங்களை,பணங்களை, தொழிநுட்பத்தை, அரசியல்வாதிகளை, எழுத்தாளர்களைப் பயன்படுத்துகின்றனர்.
உதுமானிய கிலாபத் காலப்பகுதியில்,இஸ்லாத்திக்கு எதிராகச்செயற்படுவதற்கு பொதுநலவாய அமைச்சு என்பதை உருவாக்கி,அதிலிருந்து இஸ்லாத்திக்கு எதிராகச்செயற்பட பல ஆண்,பெண்களை பயிற்றுவித்து உலகின் பல்வேறு இடங்களிக்கு அனுப்பினார்கள்,இவ்வாறு சென்றவர்கள் முஸ்லிம்களிடம் உள்ள பலவீனங்களை அறிந்து,இஸ்லாத்தில் கொள்கைரீதியான பிளவுகளை ஏற்படுத்தினர்.இதனால் அஹ்லுஸூன்னாவுக்கு மாற்றமான புதியகொள்கைள் பரவின.இம்மார்க்க ரீதியான பிளவே உஸ்மானியகிலாபத்தின் வீழ்ச்சிக்கு அடிபப்படைக்காரணமாக அமைந்தது.
ஒரு சமுகம் தனது கடந்தகாலவரலாற்றைக்கற்கும் போது அது தன்பழங்கால பெருமைகளை உணர்ந்துபுத்துணர்வும்,எழிச்சியும் பெறமுடியும் என்பது மட்டுமன்றி, நிகழ்காலப்பிரச்சினைகளிக்குத் தேவையான படிப்பினைகளைப் பெறமுடியும். என்பதற்கு இணங்க நாம் எமது வரலாற்றை சரியான முறையில் படித்து,தெளிவான விளக்கங்களை(,படிப்பினைகளை) பெறமுயற்சிப்போம்.

0 comments:
Post a Comment