Sunday, January 26, 2014

மேல்மாகாண சபைத்தேர்தலும் கம்பஹா மாவட்ட முஸ்லீம்களும்

மேல்மாகாண சபைத்தேர்தலும் கம்பஹா மாவட்ட முஸ்லீம்களும்

கலைக்கப்பட்ட மேல்மாகாண சபைக்கான தேர்தல் 2014 மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. மேல்மாகாணத்தைப் பொறுத்தவரை கொழும்பு கம்பஹா களுத்துறை ஆகிய 3 மாவட்டங்கள் இதில் உள்ளடங்குகின்றன. நாம் இப்பகுதியில் கம்பஹா மாவட்டம் பற்றிய விடயத்துக்கு வருவோம்.

கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக (4.2 வீதத்தினர்) வாழ்கின்றனர். முஸ்லிம் வாக்காளர்களை பொறுத்தவரை ஏறத்தாள 65000 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். குறைந்த பட்சம் 2 பிரதிநிதிகளை மாகாண சபைக்குத் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தும் இதுவரை ஒருவரே இருந்து வருகிறார்.

கடந்த 2009 இல் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முஸ்லீம் காங்கிரஸ் துஆ உள்ளிட்ட கட்சிகளில் முஸ்லீம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் முஸ்லிம் காங்ரஸ் சார்பாக போட்டியிட்ட சாபி ரஹீம் 12 344 வாக்குகளைப்பெற்று மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். சுதந்திர கட்சி சார்பாக போட்டியிட்ட சகாவுல்லாஹ் 21 857 வாக்குகளைப் பெற்ற போதும் தெரிவாகவில்லை.

முகா இத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் 18 014 வாக்குகளைப்பெற்றுக் கொண்டது.  இதில் சாபி ரஹீம் 12 344 வாக்குகளைப்பெற்று மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். அவர் கடந்த 2004 இல் நடந்த மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு 3001 வாக்குகளைப்பெற்று மாகாண சபைக்குத் தெரிவானார்.

இம்முறை பல்வேறு கட்சிகள் முஸ்லீம் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளன. இம்முறை பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க பெரும் முயற்சி எடுக்க வேண்டும். 5 இற்கும் அதிகமான கட்சிகளில் முஸ்லீம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தனைக்கும் தெரிவுசெய்யப்படப்போவது ஒரு முஸ்லிம் வேட்பாளர். அதுவும் கிடைக்காமல் போக செய்யும் சுய நல அரசியல்வாதிகளாக எம்மவர்கள் காணப்படுகின்றனர். அகில இலங்கை மக்கள் காங்ரஸ்  கட்சி தனித்துப்போட்டியிடுகிறது.பெறுமதிமிக்க வாக்குகள் சிதறடிக்கப்பட வாய்ப்புக்களே அதிகம். மக்கள் தமது வாக்குகளை அளிக்க கூடிய கவனம் எடுக்க வேண்டும். 

வெறும் பொய்ப்பிரச்சாரங்களை நம்பியும் கவர்ச்சிகளுக்கு அடிபணியாமலும் உங்கள் அமானிதமான வாக்குகளை உரிய பிரதிநிதிகளுக்கு வழங்கி எமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். புதிய கட்சிகள் வெறும் சோபனக்காட்சிகள் மாத்திரமே. அது எமது பிரதிநிதித்துவத்தை சிதறடிக்க பேரினவாத அரசினால் போடப்பட்ட திட்டமேயாகும்.


0 comments:

Post a Comment

 
;